sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வறண்டது சோலையாறு அணை; கவலையில் பாசன விவசாயிகள்

/

வறண்டது சோலையாறு அணை; கவலையில் பாசன விவசாயிகள்

வறண்டது சோலையாறு அணை; கவலையில் பாசன விவசாயிகள்

வறண்டது சோலையாறு அணை; கவலையில் பாசன விவசாயிகள்


ADDED : மே 02, 2025 08:36 PM

Google News

ADDED : மே 02, 2025 08:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; சோலையாறு அணை வறண்டு காணப்படுவதால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

வால்பாறையில் ஆண்டு தோறும், பருவமழை பெய்யும் போது, பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத்திட்டத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான சோலையாறு அணை நிரம்புகிறது. இதனையடுத்து, பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டு பருவமழையின் போது, சோலையாறு, மேல்நீராறு, கீழ்நீராறு, காடம்பாறை, மேல் ஆழியாறு, பரம்பிக்குளம், ஆழியாறு ஆகிய அணைகள் நிரம்பின.

இந்நிலையில், கடந்த ஐந்து மாதங்களாக, வால்பாறையில் மழைப்பொழிவு இல்லை. இடையிடையே கோடை மழை பெய்கிறது. இருப்பினும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரிக்கவில்லை.

இதனால், ஆறுகள் வறண்டுள்ளன. 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 1.98 அடியாக இருந்தது. சோலையாறு அணை வறண்ட நிலையில் காணப்படுவதால், மலைக்குன்றுகளுக்கு இடையே இருந்த நீர் வற்றி காணப்படுகிறது. இதனால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us