ADDED : செப் 16, 2025 11:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், சோலார் மின் இணைப்பு தொடர்பான சிறப்பு முகாம், சூலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, அண்ணா கலையரங்கில் இன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.
சோலார் பேனல் விற்பனையாளர்கள், வங்கி அலுவலர்கள், மின் வாரிய அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மின் நுகர்வோருக்கு, சோலார் மின் இணைப்பு குறித்து ஆலோசனை வழங்குகின்றனர். இத்தகவலை, ஒண்டிப்புதுார் செயற்பொறியாளர் பிந்து தெரிவித்துள்ளார்.