/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூரிய சக்தி மின் திட்ட முகாம் சூலுாரில் நாளை நடக்கிறது
/
சூரிய சக்தி மின் திட்ட முகாம் சூலுாரில் நாளை நடக்கிறது
சூரிய சக்தி மின் திட்ட முகாம் சூலுாரில் நாளை நடக்கிறது
சூரிய சக்தி மின் திட்ட முகாம் சூலுாரில் நாளை நடக்கிறது
ADDED : செப் 15, 2025 10:38 PM
சூலுார்; பிரதம மந்திரியின் சூரிய சக்தி மின் திட்ட விழிப்புணர்வு முகாம், சூலுாரில் நாளை நடக்கிறது.
வீடுகளுக்கான பிரதம மந்திரியின் சூரிய சக்தி மின் திட்டம் குறித்து, தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சூலுார் மின்வாரிய அலுவலகம் சார்பில், இத்திட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம், சூலுார் பழைய பஸ் ஸ்டாண்டில், நாளை காலை, 9:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை நடக்கிறது. முகாமில், சூரிய சக்தியை சேமிக்கும் பேனல்கள் நிறுவுதல், அதற்கான செலவு, கிடைக்கும் பயன்கள் குறித்து அதிகாரிகள் விளக்க உள்ளனர்.
வீட்டு உபயோக மின் இணைப்புள்ள நுகர்வோர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். சோலார் பேனல்கள் விற்பனையாளர்கள், மின் வாரிய அதிகாரிகள், வங்கி அலுவலர்கள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று பயனடைய , மின் வாரிய அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.