ADDED : ஏப் 18, 2025 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனுார்; மது போதையில் தகராறில் ஈடுபட்ட மகனை அரிவாளால் வெட்டி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
குனியமுத்துார் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் விஸ்வநாதன், 59 ; ஓட்டல் தொழிலாளி. இவரது மகன் விஜயகுமார், 27; லேத் ஒர்க் ஷாப் தொழிலாளி.
நேற்று மாலை போதையில் வந்த விஜயகுமார் வீட்டிலிருந்த பொருட்களை போட்டு உடைத்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த விஸ்வநாதன் அரிவாளால் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் விஜயகுமாரை வெட்டியுள்ளார்.
படுகாயமடைந்த விஜயகுமார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குனியமுத்தூர் போலீசார் விஸ்வநாதனை கைது செய்து விசாரிக்கின்றனர்.