sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 29, 2025 ,புரட்டாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நடை அடைத்த பின் எஸ்.பி., தரிசனம்: கோவில் பணியாளர் இருவர் 'சஸ்பெண்ட்'

/

நடை அடைத்த பின் எஸ்.பி., தரிசனம்: கோவில் பணியாளர் இருவர் 'சஸ்பெண்ட்'

நடை அடைத்த பின் எஸ்.பி., தரிசனம்: கோவில் பணியாளர் இருவர் 'சஸ்பெண்ட்'

நடை அடைத்த பின் எஸ்.பி., தரிசனம்: கோவில் பணியாளர் இருவர் 'சஸ்பெண்ட்'


ADDED : ஜூலை 23, 2025 11:36 PM

Google News

ADDED : ஜூலை 23, 2025 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூ: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், நடை அடைத்தபின், எஸ்.பி., சுவாமி தரிசனம் செய்ததாக எழுந்த புகாரில், அர்ச்சகர் மற்றும் கோவில் ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கடந்த நான்கு நாட்களுக்கு முன், இரவு, கோவில் நடை அடைக்கும் நேரத்தில், பழனி பட்டாலியன் எஸ்.பி., பாண்டியராஜன் சுவாமி தரிசனம் செய்து சென்றார்.

இச்சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டார். ஆகமவிதியை மீறி, எஸ்.பி.,யை சுவாமி தரிசனம் செய்ய வைத்த கோவில் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சிவனடியார்கள், கலெக்டர் அலுவலகத்திலும், ஹிந்து முன்னணியினர், அறநிலையத்துறை இணை கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்தனர்.

இந்நிலையில், நிர்வாக அனுமதியின்றி தன்னிச்சையாக, எஸ்.பி.,யை சுவாமி தரிசனம் செய்ய வைத்த கோவில் பணியாளர் வேல்முருகன் மற்றும் அர்ச்சகர் சாமிநாதன் ஆகிய இருவரையும், சஸ்பெண்ட் செய்து, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தக்கார் செந்தில்குமார், நேற்று உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us