sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காணாமல் போன 304 மொபைல் போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைத்த எஸ்.பி.,

/

காணாமல் போன 304 மொபைல் போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைத்த எஸ்.பி.,

காணாமல் போன 304 மொபைல் போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைத்த எஸ்.பி.,

காணாமல் போன 304 மொபைல் போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைத்த எஸ்.பி.,


ADDED : ஏப் 02, 2025 07:02 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 07:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை மாவட்ட பகுதிகளில் திருட்டு மற்றும் காணாமல் போன 304 மொபைல் போன்களை, எஸ்.பி., கார்த்திகேயன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

கோவை மாவட்ட பகுதிகளில், கடந்த மூன்று மாதங்களில் காணாமல் போன, ரூ. 54.26 லட்சம் மதிப்பிலான, 304 மொபைல் போன்கள் மீட்கப்பட்டன. அவற்றை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று நடந்தது. எஸ்.பி., கார்த்திகேயன் போன்களை ஒப்படைத்தார்.

அப்போது அவர் கூறுகையில், ''மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொலைந்து அல்லது திருட்டு போன மொபைல் போன்கள், போலீசாரின் சிறப்பான செயல்பட்டால் மீட்கப்படுகிறது. மாதந்தோறும் 80 முதல் 100 போன்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

கடந்த 3 மாதங்களில், 304 போன்கள் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில், வரலாற்று பதிவேட்டில் உள்ள நபர்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

வெளியூர்களில் இருந்து நம் மாவட்டத்திற்குள் வந்துள்ள நபர்களையும் கண்காணித்து வருகிறோம். இது தவிர, கல்லுாரி மாணவர்கள் மத்தியில் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக, படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து, அவர்களையும் கண்காணித்து வருகிறோம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us