ADDED : ஏப் 02, 2025 10:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாாச்சி; அங்கலக்குறிச்சி கோட்ட அளவில், மின் நுகர்வோர் குறைகேட்பு சிறப்பு முகாம், வரும் 5ம் தேதி நடக்கிறது.
அங்கலக்குறிச்சி அலுவலக வளாகத்தில் காலை, 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கும் முகாமில், பில்லிங், மீட்டர் பழுது, குறைந்த மின்னழுத்தம், மின் கம்பம் மாற்றுதல் உள்ளிட்ட மின் சார்ந்த புகார்களை தெரிவித்து, பிரச்னைக்கு தீர்வு காணலாம்.
இந்த தகவலை, செயற்பொறியாளர் தேவானந்த் தெரிவித்துள்ளார்.