sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஊராட்சி அலுவலகங்களில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

/

ஊராட்சி அலுவலகங்களில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

ஊராட்சி அலுவலகங்களில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

ஊராட்சி அலுவலகங்களில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்


ADDED : பிப் 13, 2025 11:24 PM

Google News

ADDED : பிப் 13, 2025 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக, காரமடை வட்டாரத்தில் உள்ள ஊராட்சி அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது என காரமடை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது:-

வேளாண் அடுக்கு திட்டத்தின் கீழ் மின்னனு முறையில் விவசாயிகளின் விவரம் சேகரிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட உள்ளது.

விவசாயிகளின் விவரங்களை இணையத்தில் பதிவு செய்யும் பணியை வேளாண்மை உதவி அலுவலர்கள், தோட்டக்கலை உதவி அலுவலர்கள், கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் சமுதாய வள பயிற்றுநர்கள் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.

காரமடை வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், ஊராட்சி அலுவலகம் அல்லது கிராம நிர்வாக அலுவலகங்களில், இந்த சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தங்களது ஆவணங்களை எடுத்துக் கொண்டு இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.----






      Dinamalar
      Follow us