/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அனுமதியற்ற மனைகளுக்கு அனுமதி பெற சிறப்பு முகாம்
/
அனுமதியற்ற மனைகளுக்கு அனுமதி பெற சிறப்பு முகாம்
ADDED : பிப் 03, 2024 01:04 AM
கோவை:மாநகராட்சி பகுதிகளில் அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்தும் வகையில், மாநகராட்சி சார்பில், பிப்., 11 மற்றும் 18 ஆகிய தேதிகளில், சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.
இது குறித்து, மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அனுமதியற்ற மனை மற்றும் பிரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளை வரன்முறைப் படுத்தும் காலம் பிப்.,2024 உடன் முடிவடைகிறது. எனவே, மனைகளை வரைமுறைப்படுத்த மாநகராட்சி சார்பில், மண்டல அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
எனவே, பொதுமக்கள் கடந்த 2016ம் ஆண்டு, அக்.,20ம் தேதிக்கு(20.10.2016) முன் பதிவு செய்யப்பட்ட மனை மற்றும் பிரிக்கப்பட்ட மனைகளின் ஆவணம், வரைபடம் மற்றும் வங்கி கணக்கிலிருந்து விண்ணப்ப கட்டணமாக ரூ.500 ஆன்லைனில் செலுத்தி, விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.
மாநகராட்சி பகுதிகளில் அமையும் அனுமதியற்ற மனைப்பிரிவு வரைபடங்கள், வரன்முறைப்படுத்த மாநகராட்சி பிரதான அலுவலகம் நகரமைப்பு பிரிவில் பிப்.,23ம் தேதிக்குள் அளித்தால், அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மாநகராட்சி மூலமாக,வரன்முறைபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு, செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

