sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு

/

 தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு

 தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு

 தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு


ADDED : டிச 26, 2025 06:33 AM

Google News

ADDED : டிச 26, 2025 06:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: இயேசு கிறிஸ்து பிறந்த நாள் கிறிஸ்துமஸ் தினமாக நாடு முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு புனித லுார்து அன்னை தேவாலயத்தில், இரவு, 11:00 மணி முதல் நள்ளிரவு, 2:00 மணி வரை கிறிஸ்துமஸ் திருப்பலி திருவிழா நடந்தது.

திருப்பலி நிகழ்ச்சியை பங்குதந்தை ரெவெரன்ட் பாதர் அருட்திரு லாரன்ஸ் அடிகளார், அருட்சகோதரர் அஜிட்டோ சேவியர் ஆகியோர் திருப்பலி நிறைவேற்றி மக்களுக்கு ஆசி வழங்கினர்.

ஆலயத்தில், இயேசு பாலன் பாடகர் குழுவினர், மறைக்கல்வி ஆசிரியர்கள், மறைக்கல்வி குழந்தைகள் இணைந்து கிறிஸ்துமஸ் பாடல்களை பாடினர்.

இதில், இயேசு கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சி ஆலயத்தில் தத்துரூபமாக காண்பிக்கப்பட்டது. இந்த சிறப்பு ஆராதனை வழிபாட்டில் கிறிஸ்துவர்களும், மற்ற மதத்தினரும் பங்கேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையை இனிப்புகள் வழங்கியும், கேக் வெட்டியும் கொண்டாடி மகிழ்ந்தனர். ஒருவொருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தை சுற்றிலும், ஆலயத்துக்குள்ளும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வரும், 28ம் தேதி திருக்குடும்ப விழா மற்றும் மாசிலாக்குழந்தைகள் திருவிழா நடக்கிறது.

* மகாலிங்கபுரம் இந்திரா நகர் சி.எஸ்.ஐ., தேவாலயத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து, சிறப்பு பிரார்த்தனை வழிபாடு நடைபெற்றது.

* கிணத்துக்கடவு, டி.இ.எல்.சி., சர்ச்சில் நேற்று காலையில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிராத்தனை நடந்தது. இதில், சபை குரு சார்லஸ் தேவனேசன் மற்றும் பலர் பங்கேற்றனர். இயேசு பற்றிய பாடல்கள் மற்றும் பைபிள் வாசிப்பு, சிறப்பு பிராத்தனை நடந்தது. ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கூறி அன்பை பரிமாறிக் கொண்டனர்.

* வால்பாறையில் உள்ள சி.எஸ்.ஐ., தேவாலயம், ஆர்.சி.,சர்ச், சென்லுக் சர்ச், ரொட்டிக்டை புனித வனத்துசின்னப்பர் ஆலயம், கருமலை வேளாங்கண்ணிமாதா ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்துவ ஆலயங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, வண்ணமயமாய் காட்சியளித்தது.

வால்பாறை சி.எஸ்.ஐ., தேவாலயத்தில் ஆனைமலை மறைமாவட்ட தலைவர் சார்லிபன் தலைமையில் நேற்று சிறப்பு பிராத்தனை,ஜெபக்கூட்டம் நடந்தது.

இதே போல், வால்பாறை துாயஇருதய தேவாலயத்தில், ஆலய பங்குதந்தை ஜெகன்ஆண்டனி தலைமையில் சிறப்பு பிராத்தனையும், கூட்டுப்பாடற்திருப்பலியும் நடைபெற்றது.

வால்பாறை கோ-ஆப்ரெடிவ் காலனி சென்லுக் சர்ச் ஆலயபங்கு தந்தை ஜோசப்புத்துார் தலைமையில், திருப்பலி, சிறப்பு ஜெபவழிபாடு நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.

உடுமலை உடுமலை பகுதியிலுள்ள கிறிஸ்தவர்களின் வீடுகள், தேவாலயங்கள், மின்விளக்கு அலங்காரத்தில் மின்னியது. நேற்று முன்தினம் இரவு அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில், திரளாக பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.

நேற்று காலை அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை கூறி, உற்சாகமாக பண்டிகையை கொண்டாடினர்.

உடுமலை தளி ரோடு அற்புத அன்னை ஆலயத்தில், பங்கு தந்தை ஜோசப் பெலிக்ஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. வி.வி., லே-அவுட் புனித செபாஸ்தியார் தேவலாயம், சி.எஸ்.ஐ., இம்மானுவேல் ஆலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் சிறப்பாக கொண்டாடப்பட்டது.






      Dinamalar
      Follow us