ADDED : ஜன 03, 2025 10:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; கோவை மாவட்டத்தில், பச்சாபாளையம் உள்பட 10 ஊராட்சிகளில், இன்று (4ம் தேதி) சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது.
கடந்த ஆண்டு, ஏப். 1 முதல், நடப்பு ஆண்டு மார்ச் 31 வரை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், செய்யப்பட்ட பணிகள் மற்றும் 2016 முதல் 2021ம் ஆண்டு வரை, பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள் குறித்த, சமூக தணிக்கை, கோவை மாவட்டத்தில் நடக்கிறது.
இன்று (4ம் தேதி) காலை 11:00 மணிக்கு, பச்சாபாளையம் ஊராட்சி உள்பட பத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது. இதில் சமூக தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. இதில் பங்கேற்க, பொது மக்களுக்கு, ஊரக வளர்ச்சித் துறை அழைப்பு விடுத்துள்ளது.