/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரத்தினம் குழுமங்கள் சார்பில் சிறப்பு அரங்குகள் திறப்பு
/
ரத்தினம் குழுமங்கள் சார்பில் சிறப்பு அரங்குகள் திறப்பு
ரத்தினம் குழுமங்கள் சார்பில் சிறப்பு அரங்குகள் திறப்பு
ரத்தினம் குழுமங்கள் சார்பில் சிறப்பு அரங்குகள் திறப்பு
ADDED : பிப் 19, 2026 06:21 AM

கோவை: ரத்தினம் கல்விக் குழுமங்கள் சார்பில், மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் வகையில் 'நெக்ஸ்ட் ஜென் கேரியர் ஹப்' மற்றும் 'திங்க் டேங்க் தியேட்டர்' என்ற அரங்குகள் திறப்பு விழா நடந்தது.
ரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் மதன்செந்தில் தலைமை வகித்தார். சென்னையின் புகழ்பெற்ற 'புட் ஹப்' என்ற நிறுவனத்தின் தலைமை மனிதவள மேம்பாட்டு அதிகாரி சுரேஷ் மற்றும் தலைமை பொறியாளர் அனிவர் அரங்குகளை திறந்து வைத்தனர்.
சிறப்பு விருந்தினர்கள் பேசுகையில், ''மாணவர்கள் தங்கள் படிக்கும் காலத்திலேயே தங்களது எதிர்காலத்தை திட்டமிட வேண்டும்,'' என்றனர்.
ரத்தினம் கல்விக் குழுமங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி மாணிக்கம், முதன்மை வணிக அதிகாரி நாகராஜ் பங்கேற்றனர்.

