/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேவாலயங்களில் இன்று சிறப்பு பிரார்த்தனை
/
தேவாலயங்களில் இன்று சிறப்பு பிரார்த்தனை
ADDED : ஜன 01, 2025 08:01 AM

அன்னுார்: அன்னூர் வட்டாரத்தில், தேவாலயங்களில் இன்று சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அன்னூர் நகரில், சத்தி ரோட்டில், சி.எஸ்.ஐ., கிறிஸ்து நாதர் ஆலயம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வண்ண காகிதங்கள், மின்விளக்குகள் பொருத்தப்பட்டு ஆலயத்தின் உள்புறம், வெளிப்புறம், கோபுரம் என மின் விளக்குகள் ஜொலிக்கின்றன.
'இன்று சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது. ஆயர் சிறப்பு செய்தி வழங்குகிறார்.
இத்துடன் உப்பு தோட்டம், அல்லிகுளம் பிரிவு, கெம்பநாயக்கன்பாளையம், பிள்ளையப்பம்பாளையம், பொன்னே கவுண்டன்புதூர், குன்னத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தேவாலயங்கள் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன. இவற்றில் இன்று சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது.

