/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காயம் குணமடையாத யானைக்கு எர்ணாகுளத்தில் சிறப்பு சிகிச்சை
/
காயம் குணமடையாத யானைக்கு எர்ணாகுளத்தில் சிறப்பு சிகிச்சை
காயம் குணமடையாத யானைக்கு எர்ணாகுளத்தில் சிறப்பு சிகிச்சை
காயம் குணமடையாத யானைக்கு எர்ணாகுளத்தில் சிறப்பு சிகிச்சை
ADDED : பிப் 16, 2025 10:16 PM

வால்பாறை ;வால்பாறை - சாலக்குடி ரோட்டில் காயத்துடன் சுற்றித்திரிந்த யானைக்கு, சிகிச்சை அளிக்க, கேரள வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
கேரள மாநிலம், வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில், ஆண் யானை ஒன்று நெற்றியில் காயமடைந்த நிலையில் நடமாடுவதாக, கேரள வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, கடந்த மாதம் வெற்றிலைப்பாறை பகுதியில் முகாமிட்ட யானைக்கு, சிகிச்சை அளிக்க சாலக்குடி டி.எப்.ஓ., லட்சுமி தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அங்கு கால்நடை மருத்துவர் அருண்ஜக்காரியா தலைமையிலான வனத்துறையினர், காயமடைந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். அதன்பின் நெற்றியில் காயமடைந்த பகுதியில் மருந்து தடவி, சிகிச்சை அளித்தனர்.
இருப்பினும் யானையின் உடலில் ஏற்பட்ட காயம் குணமாகாத நிலையில், யானை சோர்வாக காணப்பட்டது. இதனையடுத்து யானைக்கு மீண்டும் சிகிச்சை அளிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
கேரள வனத்துறையினர் கூறியதாவது:
வால்பாறை - சாலக்குடி செல்லும் ரோட்டில் உள்ள அதிரப்பள்ளி வனப்பகுதியில், இரு யானைகளுக்கு இடையே நடந்த மோதலில், யானையின் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. முதல் கட்டமாக யானையை மயக்க ஊசி செலுத்திய பின் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், யானை பழைய நிலைமைக்கு வரவில்லை. எனவே, யானையை எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கோடநாடு யானைகள் பயிற்சி மையத்திற்கு கொண்டு சென்று மேல்சிகிச்சை அளிக்கப்படும். அதற்கான நடவடிக்கையில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு, தெரிவித்தனர்.