/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை - பரூனிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
/
கோவை - பரூனிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
ADDED : அக் 25, 2024 06:59 AM

கோவையிலிருந்து பரூனிக்கு, சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை-பரூனி சிறப்பு ரயில் அக்., 26 முதல், நவ., 16 வரை, சனிக்கிழமைகளில் காலை, 11:50 மணிக்கு புறப்பட்டு, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக, திங்கட்கிழமை மதியம், 2:30 மணிக்கு பீஹார் மாநிலம் பரூனி சென்றடையும். ஈரோடுக்கு சனிக்கிழமை மதியம், 1:35மணிக்கும், சேலம் ஜங்சனுக்கு மதியம், 2:47 மணிக்கும் வந்து செல்லும்.
பரூனி-கோவை சிறப்பு ரயில், அக்., 29 முதல், நவ., 11 வரை செவ்வாய்கிழமைகளில் இரவு, 11:45 மணிக்கு புறப்பட்டு, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியே வெள்ளிக்கிழமை அதிகாலை, 3:45 மணிக்கு கோவை சென்றடையும். சேலத்துக்கு வியாழன் இரவு, 11:40 மணிக்கும், ஈரோடுக்கு, 1:00 மணிக்கும் வந்து செல்லும்.
இதில், ஆறு மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள், எட்டு ஸ்லீப்பர் பெட்டிகள், ஒரு இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி இணைக்கப்பட்டுள்ளன.
இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

