/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பண்டிகை நெரிசல் தவிர்க்க சிறப்பு ரயில்கள்
/
பண்டிகை நெரிசல் தவிர்க்க சிறப்பு ரயில்கள்
ADDED : ஆக 20, 2025 10:19 PM

கோவை; பண்டிகை கால பயணிகள் கூட்ட நெரிசல் தவிர்க்க போத்தனுார், கோவையில் இருந்து பரூணி, தன்பாத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என, ரயில்வே அறிவித்துள்ளது.
l கோவை - தன்பாத் (06063) வாராந்திர சிறப்பு ரயில், செப்., 5 முதல், நவ., 28 வரை கோவையில் இருந்து வெள்ளிக்கிழமைகளில், காலை, 11:50க்கு புறப்பட்டு, ஞாயிறு காலை 8:30க்கு தன்பாத் சென்றடையும்.
l தன்பாத் -கோவை (06064) வாராந்திர சிறப்பு ரயில், செப்., 8 முதல், டிச., 1 வரை தன்பாத்தில் இருந்து திங்கள் கிழமைகளில், காலை, 6:00க்கு புறப்பட்டு, புதன் அதிகாலை, 3:45க்கு கோவை வந்தடையும்.
l போத்தனுார் -பரூணி (06055) வாராந்திர சிறப்பு ரயில், செப்., 6 முதல், நவ., 29 வரை, சனிக்கிழமை களில், காலை, 11:50க்கு போத்தனுாரில் இருந்து புறப்பட்டு, திங்கள்கிழமை, மதியம், 2:30க்கு பரூணி சென்றடையும்.
l பரூணி - போத்தனுார்(06056) வாராந்திர சிறப்பு ரயில், செப்., 9 முதல், டிச., 2 வரை, செவ்வாய்க்கிழமைகளில், இரவு, 11:45க்கு பரூணியில் இருந்து புறப்பட்டு, வெள்ளிக்கிழமை, மாலை, 3:45க்கு போத்தனுார் வந்தடையும்.
சிறப்பு ரயில்களில், ஏ.சி., இரண்டடுக்கு, மூன்றடுக்கு, படுக்கை வசதி, மாற்றுத் திறனாளிக்கான சிறப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, கூடுர், நெல்லுார், ஓங்கல், விஜயவாடா, எலுரு, ராஜமுந்திரி உள்ளிட்ட பல்வேறு ஸ்டேஷன்களில் நின்று செல்லும் என, ரயில்வே அறிவித்துள்ளது.