/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வளர்பிறை ஏகாதசி சிறப்பு வழிபாடு
/
வளர்பிறை ஏகாதசி சிறப்பு வழிபாடு
ADDED : ஏப் 09, 2025 12:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, டி.கோட்டாம்பட்டியில், ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், வளர்பிறை ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
நேற்று, காலை, 10:30 மணிக்கு, உற்சவமூர்த்தி சுவாமிகளுக்கு திவ்ய திருமஞ்சனம் நடந்தது. இதற்காக, பக்தர்களிடம் இருந்து, பால், இளநீர், தேன், தயிர், திருமஞ்சன பொடி, மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்டவை பெறப்பட்டது. தொடர்ந்து, காலை, 11:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடந்தது. நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

