ADDED : அக் 26, 2025 02:54 AM
கோவை: சமூக நீதி நாளை முன்னிட்டு, 'சாதி ஒழிப்பே சமூக விடுதலை' எனும் தலைப்பில், கல்லுாரி மாணவர்களுக்கு இடையே, பேச்சுப்போட்டி நடந்தது.
பாரதியார் பல்கலையின் கட்டுப்பாட்டில் உள்ள, 22 அரசு, கலை, அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கு இடையே, இந்த பேச்சுப்போட்டி நடந்தது.
திருப்பூர், சிக்கண்ணா அரசு கலை, அறிவியல் கல்லுாரி மாணவி பாசிதாபானு, தாராபுரம் அரசு கலை, அறிவியல் கல்லுாரி மாணவர் கோகுல், ஈரோடு சிக்கையா அரசு கலை, அறிவியல் கல்லுாரி மாணவர் கவுதம், வால்பாறை அரசு கலை, அறிவியல் கல்லுாரி மாணவர் சிவசக்தி ஆகியோர், முறையே முதல் ஐந்து இடங்களை பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். பாரதியார் பல்கலை பதிவாளர் ராஜவேல் தலைமை வகித்தார். துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் துர்கா சங்கர், பல்கலை தமிழ் துறை தலைவர் தங்கமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

