/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால அவகாசமின்றி விளையாட்டு போட்டி
/
கால அவகாசமின்றி விளையாட்டு போட்டி
ADDED : ஆக 05, 2025 11:27 PM
பொள்ளாச்சி; அடுத்தடுத்து, குடியரசு தினவிழா மற்றும் பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள், முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் மற்றும் கலைத்திருவிழா நடத்தப்படவுள்ளதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்.
அரசுப்பள்ளிகளில், மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, அவர்களின் தனித்திறன் கண்டறியப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறது. தற்போது, குடியரசு தினவிழா மற்றும் பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து, முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளும் நடத்த உள்ளன. இதனிடையே கலைத்திருவிழா போட்டியும் துவங்க உள்ளது.
அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கூறுகையில், 'அடுத்த மாதம் காலாண்டு தேர்வு நடத்தப்படவுள்ள நிலையில், அடுத்தடுத்த விளையாட்டு போட்டி மற்றும் கலைத்திருவிழா போட்டி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களை, போட்டிகளில் பங்கேற்க பயிற்சி அளிப்பதா, தேர்வுக்கு தயார்படுத்துவதா என, வகுப்பு ஆசிரியர்கள் திணறி வருகின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.