/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ட்ரோன்' வாயிலாக மருந்து தெளிப்பு
/
'ட்ரோன்' வாயிலாக மருந்து தெளிப்பு
ADDED : ஆக 12, 2025 08:53 PM

வால்பாறை; தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க, 'ட்ரோன்' வாயிலாக தேயிலை செடிகளுக்கு பூச்சி மருந்து தெளிக்கப்படுகிறது.
வால்பாறையில், 50க்கும் மேற்பட்ட தேயிலை எஸ்டேட்களில், 25 ஆயிரம் ெஹக்டேரில், தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இது தவிர, சிறிய அளவில் காபி, ஏலம், மிளகு பயிரிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், தொழிலாளர் பற்றாக்குறையால் பெரும்பாலான எஸ்டேட்களில் தேயிலை பறிப்பதிலும், மருந்து தெளிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது, ேஷக்கல்முடி எஸ்டேட் பகுதியில் 'ட்ரோன்' வாயிலாக பூச்சி மருந்து தெளிக்கும் பணி நடக்கிறது.
தோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
வனவிலங்கு - மனித மோதல் அதிகரிப்பாலும், எதிர்பார்த்த கூலி கிடைக்காததாலும் தொழிலாளர்கள் எஸ்டேட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். வெளிமாநில தொழிலாளர்கள் வந்தாலும், தேயிலை தொழில் முழுமையாக செய்ய முடியாத நிலை உள்ளது.
இதை சமாளிக்க வால்பாறையில் முதன் முறையாக 'ட்ரோன்' வாயிலாக தேயிலை செடிகளுக்கு பூச்சி மருந்து தெளிக்கும் பணி நடக்கிறது. இதை கையாள தொழிலாளர்களுக்கு போதிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினர்.