/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீ காரண கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
/
ஸ்ரீ காரண கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜன 24, 2025 10:53 PM
சூலுார்; வெங்கிட்டாபுரம் ஸ்ரீ காரண கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், பிப்., 2 ம்தேதி நடக்கிறது.
சூலுார் அடுத்த வெங்கிட்டாபுரம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ காரண கரிவரதராஜ பெருமாள் கோவில் பழமையானது. இங்கு திருப்பணிகள் முடிவுற்று, வரும், 31 ம்தேதி காலை, 9:00 மணிக்கு, ஸ்ரீ மகா சுதர்சன ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்குகிறது.
பிப்.,1 ம்தேதி காலை, 7:00 மணிக்கு யாகசாலை பிரவேசம், வேதம், இதிகாசம், புராணம், ஆகமம், திவ்ய பிரபந்த பாராயணங்கள், கும்ப, பிம்ப,மண்டல ஹோமம் மற்றும் பூர்ணாஹுதி நடக்கிறது.பிப்., 2 ம்தேதி 8:30 மணிக்கு மகா பூர்ணாஹுதி  முடிந்து, 9:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினரும், ஊர் பொதுமக்களும் செய்து வருகின்றனர்.

