/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.எஸ்.வி.எம்., விதான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா
/
எஸ்.எஸ்.வி.எம்., விதான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா
எஸ்.எஸ்.வி.எம்., விதான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா
எஸ்.எஸ்.வி.எம்., விதான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா
ADDED : பிப் 13, 2025 11:29 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் எஸ்.எஸ்.வி.எம்., விதான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 11ம் ஆண்டு விழா நடந்தது.
விழாவுக்கு எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மணிமேகலை மோகன் தலைமை வகித்தார். செயலர் மோகன்தாஸ் முன்னிலை வகித்தார்.
நிர்வாக இயக்குனர் ஸ்ரீஷா நிதின் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். 12-ம் வகுப்பு மாணவி பிரியோனா வரவேற்றார்.
பள்ளியில், 10 மற்றும், 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், மத்திய அரசு வருமான வரித்துறை கமிஷனர் நந்தகுமார், கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசுகையில்,' ஒருவர் வாழ்வில் கல்வியும், திட்டமிடலும், கடின உழைப்புடன் கூடிய கவனம் சரியாக அமைந்தால், யாரும் அடைய முடியாத ஒரு லட்சியத்தினை அடைய முடியும்' என்றார்.
விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 11ம் வகுப்பு மாணவி லக்சிகா ஜாஸ்மின் நன்றி கூறினார்.

