sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாநில பூப்பந்தாட்ட 'சாம்பியன்ஷிப்' போட்டி 40 பேர் பங்கேற்பு; முதற்கட்டமாக 23 பேர் தேர்வு

/

மாநில பூப்பந்தாட்ட 'சாம்பியன்ஷிப்' போட்டி 40 பேர் பங்கேற்பு; முதற்கட்டமாக 23 பேர் தேர்வு

மாநில பூப்பந்தாட்ட 'சாம்பியன்ஷிப்' போட்டி 40 பேர் பங்கேற்பு; முதற்கட்டமாக 23 பேர் தேர்வு

மாநில பூப்பந்தாட்ட 'சாம்பியன்ஷிப்' போட்டி 40 பேர் பங்கேற்பு; முதற்கட்டமாக 23 பேர் தேர்வு


ADDED : நவ 17, 2024 10:22 PM

Google News

ADDED : நவ 17, 2024 10:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை ; கோவை மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் சார்பில் நடந்த மாணவியர் மற்றும் பெண்கள் பிரிவு அணிகளுக்கான தேர்வில், 23 பேர் முதட்டமாக தேர்வு செய்ப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில், 69வது இளையோர் மற்றும், 70வது பெண்கள் பிரிவுகளில், மாநில சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும், 30, டிச., 1ம் தேதிகளில் நடக்கிறது. இதற்கென, கோவை மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் சார்பில் மாணவியர் மற்றும் பெண்கள் பிரிவு அணிகளுக்கான தேர்வு நேற்று நடந்தது.

நேரு ஸ்டேடியம் எதிரே கோவை மாநகராட்சி மைதானத்தில் காலை, 7:30 மணி முதல் தேர்வுத்திறன் போட்டிகள் நடந்தன. இதில், இரு பிரிவுகளிலும், 40 பேர் பங்கேற்றனர். கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்களாக பெரும்பாலானோர் இருந்தனர்.

மேலும், வெளி மாவட்டங்களில் இருந்து கோவையில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் மாணவியர், அதற்கான சான்றிதழ்கள் சமர்ப்பித்து பங்கேற்றனர். 40 பேரில் போட்டித் திறன் அடிப்படையில் இளையோர் பிரிவில், 13 பேர், பெண்கள் பிரிவில், 10 பேர் என, 23 பேர் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களில் இருந்து இரு பிரிவுகளிலும் தலா, 10 பேர் அடங்கிய அணி தேர்வு செய்யப்பட்டு, மாநில சாம்பியன்ஷிப் போட்டிக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. தலா, 10 பேர் அடங்கிய அணி அடுத்த வாரம் நான்கு நாட்கள் முகாம் நடத்தப்பட்டு, அதில் இருந்து இறுதி செய்யப்படவுள்ளதாக கழக பொது செயலாளர் மார்ஷல் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us