/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில ஹேண்ட்பால் போட்டி; அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு
/
மாநில ஹேண்ட்பால் போட்டி; அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு
மாநில ஹேண்ட்பால் போட்டி; அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு
மாநில ஹேண்ட்பால் போட்டி; அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு
ADDED : டிச 03, 2024 06:31 AM

பெ.நா.பாளையம்; மாநில அளவிலான ஹேண்ட் பால் போட்டியில் பங்கேற்க நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கோவை வருவாய் மாவட்ட அளவில் கல்வித்துறை சார்பில் ஹேண்ட்பால் போட்டிகள், கே.பி.ஆர்., கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதில், மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
இதில், நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த, 14, 17 வயதுக்கு உட்பட்ட மாணவியர் முதலிடம் பெற்று, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். இதே போல இதே பள்ளியின், 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் போட்டியில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.
இப்போட்டிகளில் சிறந்த விளையாட்டு வீரர்களாக மாணவியர் ஸ்ரீஜா, அஞ்சலி, மாணவன் மதன் ஸ்ரீ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாணவ மாணவியருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன், உடற்கல்வி ஆசிரியர்கள் தனக்குமார், சுதா ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.