/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனைக்கு மாநில குழு 'விசிட்'; விருதுக்கான தொகை வழங்க ஆய்வு
/
அரசு மருத்துவமனைக்கு மாநில குழு 'விசிட்'; விருதுக்கான தொகை வழங்க ஆய்வு
அரசு மருத்துவமனைக்கு மாநில குழு 'விசிட்'; விருதுக்கான தொகை வழங்க ஆய்வு
அரசு மருத்துவமனைக்கு மாநில குழு 'விசிட்'; விருதுக்கான தொகை வழங்க ஆய்வு
ADDED : செப் 17, 2025 09:17 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அரசு மருத்துவமனை தேசிய தரச்சான்று பெற்றதையடுத்து, விருது தொகை வழங்குவதற்காக மாநில அளவிலான குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கடந்த, 2018ம் ஆண்டு தேசிய தரச்சான்றிதழ் பெற்றது. அதன்பின், 2023ம் ஆண்டு மீண்டும் தேசிய தரச்சான்றிதழ் பெற்றது.
மேலும், மகப்பேறு பிரிவுக்கும், குழந்தைகள் நலப்பகுதிக்கும் தேசிய தரச்சான்றிதழ் கிடைத்தது. குழந்தைகள் நலப்பகுதிக்கு தரச்சான்றிதழ் முதல் முறையாக தமிழகத்தில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை பெறப்பட்டது.
இதற்காக, ஆண்டுதோறும் விருது தொகை வழங்கப்படுகிறது. இதற்காக, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மேஜர் டாக்டர் சவுத்ரி, செவிலியர் திலகராணி, ஈரோடு மாவட்ட செவிலியர் ரத்னா டைசி குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா கூறியதாவது:
அரசு மருத்துவமனை தேசிய தரச்சான்றிதழ் பெற்றதால், மருத்துவமனை, மகப்பேறுவிடுதி, குழந்தைகள் நலப்பகுதி என மூன்றும் சேர்த்து மொத்தம், 55 லட்சம் ரூபாய் நிதி மூன்றாண்டுகளுக்கு வழங்கப்படும்.
இந்த தரச்சான்றிதழ்கள் பெற்ற மருத்துவமனைகளில், அதற்கான குறியீடுகள் தொடர்ந்து பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்வதற்காக, ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் குழு ஆய்வு செய்கிறது. அதன்பின், அந்த ஆண்டுக்கான விருது தொகை வழங்கப்படுகிறது.
இரண்டாவது ஆண்டு விருது தொகை வழங்குவதற்காக ஆய்வு துவங்கியுள்ளது, 19ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நடக்கிறது.
இக்குழுவினர், கடந்தாண்டு வெளி நோயாளிகள், உள்நோயாளிகள் எண்ணிக்கை, அறுவை சிகிச்சை விபரம், பிரசவம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் கேட்டறிந்தனர். மருத்துவமனையில் உள்ள, 20 பிரிவுகளின் செயல்பாடுகள், புதியதாக துவங்கப்பட உள்ள பிரிவுகள் குறித்து குழுவினருக்கு விளக்கப்பட்டது. இக்குழுவின் ஆய்வு அறிக்கைக்கு பின், விருது தொகை வழங்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.