sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பி.ஏ.பி., முன்னோடிகளுக்கு சிலை; அமைச்சர் ஆய்வு

/

பி.ஏ.பி., முன்னோடிகளுக்கு சிலை; அமைச்சர் ஆய்வு

பி.ஏ.பி., முன்னோடிகளுக்கு சிலை; அமைச்சர் ஆய்வு

பி.ஏ.பி., முன்னோடிகளுக்கு சிலை; அமைச்சர் ஆய்வு


ADDED : ஜூலை 09, 2025 10:11 PM

Google News

ADDED : ஜூலை 09, 2025 10:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: 'பி.ஏ.பி., முன்னோடிகளுக்கான சிலைகள், விவசாயிகளுக்கான பயிற்சி மற்றும் கூட்ட அரங்கம் அமைக்கும் பணிகளை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு செய்தார்.

பி.ஏ.பி., பாசன திட்டம் உருவாக காரணமாக இருந்தவர்களை சிறப்பிக்கும் வகையிலும், மற்றும் திட்டம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி, பயிற்சி மையம் ஆகியவை அமைக்கப்படும், என, தமிழக அரசு அறிவித்தது.

ஆழியாறு அணையில், திட்டப்பணி நடைபெற்றபோது ஏற்பட்ட விபத்தில் உயிர் நீத்தவர்களுக்கு, நினைவு மண்டபமாக மாற்றியும், திருத்திய திட்ட மதிப்பீடாக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பணிகள் நடக்கின்றன.

பொள்ளாச்சி நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத்திற்கு, முன்னாள் மத்திய அமைச்சர், 'சி.சுப்பிரமணியம் வளாகம்' என்று பெயர் சூட்டப்படுகிறது. இவ்வளாகத்தில், விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் கருத்தரங்கம் நடத்தும் வகையில், இரண்டு அடுக்குகள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்படுகிறது.

கட்டடத்தில், பயிற்சி அரங்கம், கண்காட்சி அரங்கம் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர், மறைந்த மத்திய முன்னாள் அமைச்சர் சுப்ரமணியம், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மகாலிங்கம் மற்றும் பழனிசாமி சிலைகளுடன் கூடிய நினைவு மண்டபம் அமைக்கும் பணிகள் 1.25 ஏக்கரில் நடக்கிறது.

கீழ்தள அரங்கிற்கு, 'வி.கே.பழனிசாமி அரங்கம்' என பெயர் சூட்டப்படுகிறது. முதல் தளத்தில் அமைக்கப்படும் அரங்கத்துக்கு 'பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அரங்கம்' என, பெயர் சூட்டப்படுகிறது.

மேலும், பி.ஏ.பி., திட்டப்பணிகள் குறித்து, பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் புகைப்படக் கண்காட்சியும் அமைக்கப்படுகிறது. இப்பணிகள் மொத்தம், நான்கு கோடியே, 28 லட்சத்து, 71 ஆயிரம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகின்றன.

இப்பணியை, செய்தித்துறை மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று ஆய்வு செய்தார். எம்.பி., ஈஸ்வரசாமி, கோவை கலெக்டர் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

நிருபர்களிடம் அமைச்சர் கூறுகையில்,''பி.ஏ.பி., பாசன திட்டத்துக்கு முன்னோடிகளாக இருந்த முன்னாள் முதல்வர் காமராஜர் உள்ளிட்ட நான்கு பேருக்கு மணிமண்டபம் கட்டும் பணிகள் விரைவில் முடிக்கப்படும். உயிர் நீத்தவர்களுக்கு மணி மண்டபமும் கட்டப்படுகிறது. பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us