/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாகன விபத்தை தவிர்க்க ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டுங்க!
/
வாகன விபத்தை தவிர்க்க ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டுங்க!
ADDED : ஜன 14, 2025 09:20 PM
கிணத்துக்கடவு:
கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், ரோட்டின் வளைவுகளில், விபத்தை தவிர்க்க, ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கிணத்துக்கடவு வட்டாரத்துக்கு உட்பட்ட கிராமப்புற ரோடுகளில், சில பகுதிகளில் போதிய அளவு மின்விளக்கு வசதி இல்லாததால், வாகன ஓட்டுநர்கள் தடுமாறி செல்கின்றனர்.
குறிப்பாக, வளைவு பகுதியில் வெளிச்சம் இல்லாததால், அவ்வப்போது விபத்தும் ஏற்படுகிறது.
இதைத் தவிர்க்க, விபத்து நடக்கும் பகுதி, முக்கிய வளைவுப் பகுதிகளில், அறிவிப்பு பலகை மற்றும் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.
மேலும், ரோட்டின் வளைவு பகுதியில் உள்ள மரங்களில், ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்ட வேண்டும்.
இரவு நேரத்தில், வாகன முகப்பு விளக்கு வெளிச்சத்தில், ஒளிரும் ஸ்டிக்கர்களை வாகன ஓட்டுநர்கள் காணும் போது, சுதாரித்து கொள்ள முடியும்.
இதனால், விபத்து தவிர்க்கப்படும், என, ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.