sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தண்டவாளத்தில் கல் :ரயிலை கவிழ்க்க சதியா?

/

தண்டவாளத்தில் கல் :ரயிலை கவிழ்க்க சதியா?

தண்டவாளத்தில் கல் :ரயிலை கவிழ்க்க சதியா?

தண்டவாளத்தில் கல் :ரயிலை கவிழ்க்க சதியா?


ADDED : ஆக 25, 2025 11:56 PM

Google News

ADDED : ஆக 25, 2025 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:

தண்டவாளத்தில் வைக்கப்பட்ட கான்கிரீட் கல் மீது எக்ஸ்பிரஸ் ரயில் ஏறிய நிலையில், இது ரயிலை கவிழ்க்க சதியா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

சென்னை - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று அதிகாலை, 2:15 மணிக்கு கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. பீளமேடு ஸ்டேஷனை கடந்து, ஆவாரம்பாளையம் ரயில்வே பாலம் அருகே சென்றபோது, பயங்கர சத்தம் கேட்டதால், டிரைவர் ரயிலை நிறுத்தினார்.

கீழே இறங்கி பார்த்தபோது, கான்கிரீட் கல் உடைந்து சிதறி கிடந்தது. பின், கோவை ஸ்டேஷனுக்கு ரயில் சென்றதும், ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மீனாட்சி மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.

'இரவில் சிலர் தண்டவாளத்தில் அமர்ந்து மது குடிக்கின்றனர். போதையில், கற்கள் மற்றும் இரும்பு பொருட்களை தண்டவாளத்தில் துாக்கி வைத்து, சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதில் ஏதேனும் சதி உள்ளதா என, 'சிசிடிவி' காட்சி பதிவுகள் உதவியுடன் விசாரிக்கிறோம்' என, போலீசார் கூறினர்.






      Dinamalar
      Follow us