sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பள்ளியில் வழங்கிய சத்து மாத்திரையை  அதிகளவில் சாப்பிட்ட மாணவி மரணம்

/

பள்ளியில் வழங்கிய சத்து மாத்திரையை  அதிகளவில் சாப்பிட்ட மாணவி மரணம்

பள்ளியில் வழங்கிய சத்து மாத்திரையை  அதிகளவில் சாப்பிட்ட மாணவி மரணம்

பள்ளியில் வழங்கிய சத்து மாத்திரையை  அதிகளவில் சாப்பிட்ட மாணவி மரணம்


ADDED : மார் 09, 2024 09:41 AM

Google News

ADDED : மார் 09, 2024 09:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை மாநகராட்சிப்பள்ளியில் கொடுத்த சத்து மாத்திரையை, அதிகளவில் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்தார்.

கோவை, சிங்காநல்லுாரை சேர்ந்தவர் ராஜாமணி, 35; டிரைவர். மனைவி புவனேஸ்வரி, 31. இவர்களது, 6 வயது மகள் தியாஸ்ரீ. சிங்காநல்லுார் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில், 1ம் வகுப்பு படித்து வந்தார்.

மாணவிக்கு சில நாட்களுக்கு முன், பள்ளியில் சத்து மாத்திரை கொடுத்துள்ளனர். இதனை அந்த குழந்தை, புத்தகப்பையில் வைத்துக் கொண்டு, அவ்வப்போது மிட்டாய் என நினைத்து, உட்கொண்டு வந்ததாக தெரிகிறது.

கடந்த, 5ம் தேதி மாணவிக்கு திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. வயிற்று போக்கில் வெளியேறிய மாத்திரைகளைக் கண்டு, அதிர்ச்சி அடைந்த பெற்றோர், குழந்தையின் புத்தகப்பையை சோதனை செய்தபோது, அதில் ஏராளமான சத்து மாத்திரைகள் இருந்துள்ளன. இதையடுத்து, சிறுமியை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இதுகுறித்து, சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மாத்திரை வடிவில் மிட்டாய்

மளிகை கடை மற்றும் பெட்டிக்கடைகளில், மாத்திரை வடிவில் மிட்டாய்கள் விற்கப்படுகின்றன. இதனால் குழந்தைகள் மாத்திரைக்கும், மிட்டாய்க்கும் வித்தியாசம் தெரியாமல் சில சமயங்களில், மாத்திரைகளை சாப்பிடும் சம்பவங்களும் நடக்கின்றன. இதனை தடுக்க பெற்றோர், குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாத்திரைகளை குழந்தைகளின் கையில் கிடைக்காத வகையில், பாதுகாப்பான இடங்களில் வைக்க வேண்டும்.








      Dinamalar
      Follow us