கருமத்தம்பட்டி; கிட்டாம்பாளையம் வி னோபாஜி நகரில் உள்ள மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையிலும், இளைஞர்கள், முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து ஏற்பாடு செய்த மாணவர் திருவிழாவில், நாணய கண்காட்சி, சிறுதானியங்களால் உருவாக்கப்பட்ட மரம், மாணவ, மாணவியரின் அறிவியல் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
சிவக்குமார் தலைமை வகித்தார். எல்லை பாதுகாப்பு படை துணை கமாண்டர் சுரேஷ் மீனா, தேசிய கொடி ஏற்றினார். கிட்டாம் பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் சந்திரசேகர் புத்தக கண்காட்சியையும், சபரி கல்வி நிறுவனங்களின் தலைவர் மோகன்குமார் மருத்துவ முகாமையும் துவக்கி வைத்தனர். தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தெக்கலுார் ரோட்டரி சங்க தலைவர் ஆறுமுகம், முன்னாள் தலைவர் வேலுசாமி, பி.எஸ்.எப்., அதிகாரி குமார், சிவக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

