ADDED : ஜூன் 21, 2025 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை : வால்பாறை திருஇருதய மேல்நிலைப்பள்ளியில் மாணவர் தலைவர் பதவி ஏற்பு விழா நடந்தது.
வால்பாறை அரசு உதவி பெறும் திரு இருதய மேல்நிலைப்பள்ளியில், மாணவர் தலைவர் பதவி ஏற்பு விழா, தலைமை ஆசிரியர் சுசீலாமேரி தலைமையில் நடந்தது. மாணவியர் ஷர்புன்நிஷா, ஆதிரா ஆகியோர் வரவேற்றனர்.
பள்ளி மாணவர் தலைவர்களாக விஷ்வா, ஸ்வேதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பல்வேறு துறைகளுக்கான மாணவர் தலைவர், துணைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஆராய்ச்சியாளர் டாக்டர் பிரேம்குமார், திருஇருதய ஆலய பங்குத்தந்தை ஜெகன்ஆண்டனி ஆகியோர் பதவி பிரமாணம் செய்து, பரிசு வழங்கினர்.
விழாவில், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.