/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை மாணவி பலாத்கார வழக்கில் மார்ச் 7ல் தீர்ப்பு!
/
கோவை மாணவி பலாத்கார வழக்கில் மார்ச் 7ல் தீர்ப்பு!
UPDATED : பிப் 28, 2026 05:51 AM
ADDED : பிப் 28, 2026 05:05 AM

கோவை:கோவையில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், நான்கு மாதத்தில் விசாரணை முடிக்கப்பட்டு, மார்ச் 7ல் தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
பீளமேடு ஏர்போர்ட் பின்புறம், பிருந்தாவன் நகர் பகுதியில், கடந்தாண்டு நவ. 2ம் தேதி இரவில், ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லுாரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டார்.
பீளமேடு போலீசார் விசாரித்து, பலாத்காரத்தில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம், சிங்கம்புனரியை சேர்ந்த சதீஷ்,30, இவரது சகோதரர் கார்த்திக்,21, மதுரை, கருப்பாயூரணியை சேர்ந்த குணா,20, ஆகியோரை காலில் சுட்டு பிடித்து கைது செய்தனர்.
இவர்கள் மீது, டிச.3ல், முதல் கட்டமாக 50 பக்க குற்றப்பத்திரிகை கூடுதல் மகளிர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு டிச.19ல் கோவை மகளிர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.
ஜன.9ல், 220 பக்க கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஜன.29ல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, பிப்.2ல் சாட்சி விசாரணை துவங்கி, பிப். 23ல் நிறைவு பெற்றது.
பிப். 24ல் அரசு தரப்பு வக்கீல் ஜிஷா, இறுதி வாதத்தை முன்வைத்தார். எதிர் தரப்பில் ஆஜரான இலவச சட்ட உதவி வக்கீல்கள் வாதிட்டனர். இரு தரப்பு வாதம் முடிந்ததையடுத்து, மார்ச் 7ல் தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி சுந்தரராஜ் நேற்று அறிவித்தார்.

