நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனுார்;ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் உள்ள தனியார் கல்லுாரி விடுதியில் தங்கி, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அப்துல் ரஹூப், 20 மூன்றாமாண்டு. பி.டெக், படித்து வந்தார். நேற்று காலை கலலுாரிக்கு சென்றவர், இடையிலேயே விடுதிக்கு திரும்பினார்.
மதியம் உடன் தங்கியுள்ள மாணவர் அறைக்கு சென்றார். அப்துல் ரஹூப் லுங்கியால் துாக்கு போட்டும், இடது கையில் அறுத்தும் தற்கொலை செய்திருப்பதை கண்டார்.
செட்டிபாளையம் போலீசார் சடலத்தை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், ஆன்லைன் வர்த்தகத்தில் இவர் ஈடுபட்டு வந்ததும், அதில் நஷ்டம் ஏற்பட்டு தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

