/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்கள் திறமை வெளிப்படுத்தும் விழா
/
மாணவர்கள் திறமை வெளிப்படுத்தும் விழா
ADDED : மார் 03, 2026 05:53 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வித்யா மந்திர் பள்ளியில், மாணவர்கள் திறமை வெளிப்படுத்தும் விழா நடந்தது.
மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், பள்ளிகளில், அவ்வப்போது பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன் வாயிலாக, அவர்களது திறமைகள் வெளிக்கொணரப்படுகின்றன.
இந்நிலையில், பொள்ளாச்சி, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வித்யா மந்திர் பள்ளி மாணவர்களுக்கு, திறமை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிக்கான விழா நடந்தது.
இதில், மாணவர்கள் பலர் திருக்குறள், வாக்கியம் வாசிப்பு, படங்கள் அறிதல், தலைநகரங்கள் மற்றும் மாநிலங்கள் உள்ளிட்ட பல போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பாட்டி - தாத்தா தினம் கொண்டாடப்பட்டது. அதன் பின் பாத பூஜை நடந்தது. இதில், மாணவர்களை பாட்டி தாத்தா இணைந்து ஆசிர்வதித்தனர். தொடர்ந்து விளையாட்டுப் போட்டி நடந்தது.

