sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கணிதம் கற்க மாணவர்கள் ஆர்வம்; மாநகராட்சி பள்ளிகளில் ஆய்வகம்

/

கணிதம் கற்க மாணவர்கள் ஆர்வம்; மாநகராட்சி பள்ளிகளில் ஆய்வகம்

கணிதம் கற்க மாணவர்கள் ஆர்வம்; மாநகராட்சி பள்ளிகளில் ஆய்வகம்

கணிதம் கற்க மாணவர்கள் ஆர்வம்; மாநகராட்சி பள்ளிகளில் ஆய்வகம்


ADDED : ஜூன் 23, 2025 11:54 PM

Google News

ADDED : ஜூன் 23, 2025 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கணிதத் திறனை மேம்படுத்தும் நோக்கில், பரீட்சார்த்த முறையில் சில பள்ளிகளில் மட்டும் கணித ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சித்தாபுதுார், செல்வபுரம், ராமகிருஷ்ணாபுரம், அனுப்பர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஆய்வகங்கள் செயல்படுகின்றன. ஆறாம் மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று நிலைகளில் பயிற்சி அளிக்கப்படுவதுடன், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் கணிதக் கற்றல் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மென்பொருளில், மாணவர்கள் உள்ளீடு செய்து, கணிதப் பாடப்பகுதிகளை 'மாடியூல்' அடிப்படையில், கணினி வழியாக செயல்முறையாக கற்றுக்கொள்கிறார்கள்.

அவர்கள் மேற்கொள்ளும் பயிற்சிகள் மற்றும் பெறும் மதிப்பெண் அடிப்படையில், மாணவர்களின் கற்றல் திறன் அளவிடப்படுகிறது.

கணித ஆசிரியர் கூறுகையில், 'பாடப்புத்தகத்தில் உள்ள பகுதிகளை மாணவர்கள் நேரடியாக கணித ஆய்வகத்தில் கற்றுக் கொள்கிறார்கள். இதற்காக, தனிப்பட்ட பயிற்றுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் நடுநிலை மாணவர்களின் கணிதத் திறன் மேம்பட்டுள்ளது.

நன்கு படிக்கும் மாணவர்கள் கடினமான கணக்குகளை விரைவாக செய்து முடிக்கின்றனர். கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு பயிற்றுனர்கள் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டலுடன் பயிற்சி வழங்கப்படுகிறது. இத்தகைய முயற்சிகள், கணிதப் பாடத்தின் மீது மாணவர்களிடையே ஆர்வத்தை உருவாக்குகின்றன' என்றார்.






      Dinamalar
      Follow us