/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிலம்பம், யோகாவில் மாணவர்கள் அசத்தல்
/
சிலம்பம், யோகாவில் மாணவர்கள் அசத்தல்
ADDED : டிச 09, 2025 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்: மத்திய இனை அமைச்சர் முருகன் ஏற்பாட்டில், மேட்டுப்பாளையத்தில் மத்திய விளையாட்டு அமைச்சகத்தின், 'கேலோ இந்தியா பிட் இந்தியா' திட்டத்தில் 'சன்சத் கேல் மஹோத்சவ் 2025' விளையாட்டு போட்டிகள் துவங்கி, நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, காரமடையில் உள்ள, ரங்கநாதர் பப்ளிக் பள்ளியில் சிலம்பம், யோகா போட்டிகள் தனித்தனியாக நடைபெற்றன.
இதில் மேட்டுப்பாளையம், காரமடை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். சிலம்பம், யோகா செய்து அசத்தினர்.----

