ADDED : மார் 09, 2026 05:40 AM
அ நிறம் | அளவு
தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டுவிழா கல்லூரியில் நடந்தது.
கல்லூரி முதல்வர் (பொ) செல்வம் தலைமை வகித்து, ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினராக, கோவை அரசு கலை கல்லூரியின் அரசியல் அறிவியல் துறை இணை பேராசிரியர் கனகராஜ் பங்கேற்று, பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்ற 150 மாணவ, மாணவிகளுக்கு நியமன ஆணை வழங்கினார்.
அதன் பின் அவர் பேசுகையில், தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளதால், 21ம் நூற்றாண்டு, மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகளை தருகிறது. இதை மாணவர்கள் பயன்படுத்தி திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும், மொபைல்போன்களுக்கு அடிமையாகக் கூடாது,'' என்றார்.
அதன்பின், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
