sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மழை காலத்தில் வழுக்கி விழும் மாணவர்கள் ;சத்துணவு வழங்கும் இடத்தை மாற்றுவார்களா?

/

மழை காலத்தில் வழுக்கி விழும் மாணவர்கள் ;சத்துணவு வழங்கும் இடத்தை மாற்றுவார்களா?

மழை காலத்தில் வழுக்கி விழும் மாணவர்கள் ;சத்துணவு வழங்கும் இடத்தை மாற்றுவார்களா?

மழை காலத்தில் வழுக்கி விழும் மாணவர்கள் ;சத்துணவு வழங்கும் இடத்தை மாற்றுவார்களா?


ADDED : ஜன 14, 2024 11:35 PM

Google News

ADDED : ஜன 14, 2024 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு அரசு மேல் நிலைப்பள்ளியில், சத்துணவு வழங்கும் இடம் அசுத்தமாக இருப்பதால் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர். பள்ளியில் ஏராளமான மாணவர்கள் சத்துணவு திட்டத்தில் மதியம் உணவு சாப்பிடுகின்றனர்.

பள்ளி வளாகத்தில், திறந்தவெளியில் மரத்தடியில் மதிய உணவு வழங்கப்படுகிறது. மாணவர்கள் வரிசையில் நின்று உணவு பெறுகின்றனர். இந்த மரத்தின் கிளைகளில் காக்கை மற்றும் பறவைகள் அமர்ந்து எச்சமிட்டுள்ளன.

இதனால், சத்துணவில் பறவைகளின் எச்சம் விழும் வாய்ப்புள்ளது. மழை காலங்களில் இந்த இடம் சேறும் சகதியுமாக காணப்பட்டாலும், மரத்தின் அடியில் தான் உணவு வழங்கப்படுகிறது. அப்போது, தடுமாறி சென்று மழையில் நனைந்தபடியே உணவு பெறுகின்றனர்.

சில நேரங்களில் மாணவர்கள் சேற்றில் வழுக்கி விழுகின்றனர். இதனால் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மரத்தில் மாணவர்களை கண்காணிக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. ஆனால், கேமரா பழுதடைந்து மரத்தில் தொங்கிக்கொண்டு உள்ளது. இந்த மரத்தின் அடியில் குப்பை கொட்டப்படுவதால், சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் கூறியதாவது:

மழை காலத்தில் சத்துணவு வாங்குவது சிரமமாக உள்ளது. சிலசமயம் வழுக்கி கீழே விழுகின்றனர். இதற்கு 'செட்' அமைத்து கொடுக்க வேண்டும். 'செட்' அமைத்து தர பெற்றோர்கள் முன் வந்தாலும் பள்ளி நிர்வாகம் ஏற்க மறுக்கிறது.

இது பற்றி பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் கேட்டால், இன்னும் மூன்று மாத காலத்தில் இங்கு 'செட்' அமைக்கப்படும் என தெரிவித்தனர். மழை நேரத்தில் ஏதேனும் கட்டடத்தில் உணவு வழங்கலாமே என கேட்டதற்கு, சிறிய விஷயத்தை பெரிதாக்க வேண்டாம் என, ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளிக்கு வந்த நேரத்தில் தெரிவித்தாலும், இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. பிரச்னையை தலைமை ஆசிரியரிடம் தெரிவியுங்கள் என கூறி சென்றார்.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us