ADDED : ஜன 25, 2024 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : குரும்பபாளையத்தில், செயல்படும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை, புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக, 'வாசிக்கலாம் வாங்க' என்ற இயக்கத்தை பள்ளி, கல்லுாரிகளில் நடத்தி வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, நேரு நகரிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் இந்த தொடர் வாசிப்பு இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடந்த புத்தக வாசிப்பு போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. அறக்கட்டளை நிறுவனர் தில்லை செந்தில் பிரபு, பரிசுகளாக புத்தகங்கள், சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். தலைமை ஆசிரியை சீதா லட்சுமி, அறக்கட்டளை தன்னார்வலர்கள் அன்பரசன், ராஜமுருகன், தினேஷ் மற்றும் ஆசிரியாகள் பங்கேற்றனர்.