sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பெற்றோரிடம் ஆசி பெற்ற   மாணவர்கள்

/

பெற்றோரிடம் ஆசி பெற்ற   மாணவர்கள்

பெற்றோரிடம் ஆசி பெற்ற   மாணவர்கள்

பெற்றோரிடம் ஆசி பெற்ற   மாணவர்கள்


ADDED : ஜன 26, 2025 11:40 PM

Google News

ADDED : ஜன 26, 2025 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி,; பொள்ளாச்சி லதாங்கி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், தங்களது பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்து ஆசி பெறும் நிகழ்ச்சி, தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

பள்ளி செயலர் ரமேஷ் ராஜ்குமார், பள்ளித்தாளாளர் சாந்திதேவி, பள்ளி நிர்வாக இயக்குனர் ஸ்ரீ ரிதன்யா முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் சந்திராவதி வரவேற்றார்.

கோவை மங்கையர்கரசியார் அறநெறி அறக்கட்டளை வாயிலாக, 10 சிவனடியார்கள் கொண்ட குழுவினரால் தமிழ் முறைப்படி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மந்திரங்கள் ஓதி அம்மமையப்பர் வழிபாடு, அம்மையப்பருக்கு அபிேஷகம், வேள்வி, பெற்றோருக்கு பாத பூஜை, தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடந்தது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவியர் தங்களுடைய பெற்றோர்களின் பாதங்களுக்கு பூஜை செய்து சந்தனம், குங்குமம் பொட்டிட்டு, போற்றிகள் கூறி மலர் துாவி அர்ச்சனை செய்து ஆராதித்தனர். ஆசிரியர்களுக்கு போற்றிகள் கூறி ஆசிரியர்களின் ஆசி பெற்றனர். வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நன்னெறிகளை ஏற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.






      Dinamalar
      Follow us