/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராக்கெட் ஏவும் காட்சியை நேரில் கண்ட மாணவர்கள்
/
ராக்கெட் ஏவும் காட்சியை நேரில் கண்ட மாணவர்கள்
ADDED : ஜன 15, 2026 05:08 AM
கோவை: எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான, விண்வெளி வினாடி - வினா போட்டியை நடத்தியது.
தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 10 பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் சுமார் 15,000 மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டிகளில் சிறந்த திறனை வெளிப்படுத்திய 200 மாணவர்களுக்கு, ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்துசெயற்கைக்கோள் ஏவுதலை காணும் அரிய வாய்ப்பு வழங்கப்பட்டது. கடந்த ஜன., 12ம் தேதி பி.எஸ்.எல்.வி, - சி 62 ராக்கெட் ஏவுதலை மாணவர்கள் கண்டனர்.
மாணவர்களிடையே விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வத்தை துாண்டும் வகையில், சக்தி பொறியியல் கல்லுாரி இந்த வினாடி - வினா போட்டியை நடத்தியது.

