/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனையில் காயகல்ப குழு ஆய்வு
/
அரசு மருத்துவமனையில் காயகல்ப குழு ஆய்வு
ADDED : டிச 04, 2024 10:10 PM
வால்பாறை; வால்பாறை அரசு மருத்துவமனையை, காயகல்ப குழுவினர் ஆய்வு செய்தனர்.
மத்திய அரசின் துாய்மை பாரத திட்டத்தின் கீழ், சுகாதாரமாக இருக்கும் அரசு மருத்துவமனைக்கு ஆண்டு தோறும் காயகல்ப ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, மாநில அளவில் முதல் மற்றும் இரண்டாம் பரிசு வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், வால்பாறை அரசு மருத்துவமனையில் மாநில அளவிலான காயகல்ப ஆண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்தியூர் டாக்டர் ராம்குமார், கம்பம் ஆண் செவிலியர் சரவணன் தலைமையிலான குழுவினர் மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் நித்யா கூறுகையில், ''வால்பாறை அரசு மருத்துவமனை, சிறந்த மருத்துவமனையாக கடந்த இரண்டு முறை தேர்வு செய்யப்பட்டு, பரிசும் கிடைத்துள்ளது. இந்த முறையும் பரிசு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்,'' என்றார்.