/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாராஹி அம்மனுக்கு குங்கும அர்ச்சனை
/
வாராஹி அம்மனுக்கு குங்கும அர்ச்சனை
ADDED : ஜூலை 15, 2025 09:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் கவுண்டம்பாளையத்தில் உள்ள வாராஹி அம்மன் கோவிலில் பஞ்சமி திதியையொட்டி சிறப்பு குங்கும அர்ச்சனை நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் கவுண்டம்பாளையத்தில் வாராஹி அம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை இங்கு பஞ்சமி திதியையொட்டி வாராகி அம்பாளுக்கு காலை, 9:00 மணிக்கு அபிஷேகம் நடந்தது.
அதைத்தொடர்ந்து, குங்குமம் அர்ச்சனை நடந்தது. நிகழ்ச்சியையொட்டி அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.