sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 நவீன தொழில்நுட்ப வசதியுடன் கண்காணிப்பு கேமரா பொருத்தணும்

/

 நவீன தொழில்நுட்ப வசதியுடன் கண்காணிப்பு கேமரா பொருத்தணும்

 நவீன தொழில்நுட்ப வசதியுடன் கண்காணிப்பு கேமரா பொருத்தணும்

 நவீன தொழில்நுட்ப வசதியுடன் கண்காணிப்பு கேமரா பொருத்தணும்


ADDED : நவ 20, 2025 02:15 AM

Google News

ADDED : நவ 20, 2025 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதிகளில் நவீன தொழில்நுட்ப வசதியுடன் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் குடியிருப்புகள், கடைகள், வணிக வளாகங்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக, பொது இடத்தில் மது அருந்துதல், தகராறு செய்தல் மற்றும் பைக் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடக்கிறது.

இப்பிரச்னைகளை கண்டறிந்து போலீஸ் நடவடிக்கை எடுத்தாலும், பைக் திருட்டில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து பிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

கிணத்துக்கடவு முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் இருந்தாலும், அதில் குற்றவாளியின் முகம் சரியாக தெரிவதில்லை. இதனால் குற்றவாளிகளை அடையாளம் காண சிரமம் ஏற்படுவதுடன் காலதாமதமாகிறது.

இது மட்டும் இன்றி, கிராமப்புறங்களில் சிறிய அளவிலான திருட்டு உள்ளிட்ட சம்பவங்களை கண்டறிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான கண்காணிப்பு கேமராக்கள் தொழில்நுட்பக் கோளாறால் வேலை செய்வதில்லை. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

எனவே, கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதியில் வாகன பதிவு எண்கள் மற்றும் முகங்கள் தெளிவாக தெரியும் படி, புதிய தொழில்நுட்ப வசதிகள் கொண்ட நவீன கண்காணிப்பு கேமராக்கள் அதிக அளவில் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us