sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சுசி ஈமு ரூ.7.61 கோடி மோசடி வழக்கு; நிர்வாக இயக்குனருக்கு 10 ஆண்டு சிறை

/

சுசி ஈமு ரூ.7.61 கோடி மோசடி வழக்கு; நிர்வாக இயக்குனருக்கு 10 ஆண்டு சிறை

சுசி ஈமு ரூ.7.61 கோடி மோசடி வழக்கு; நிர்வாக இயக்குனருக்கு 10 ஆண்டு சிறை

சுசி ஈமு ரூ.7.61 கோடி மோசடி வழக்கு; நிர்வாக இயக்குனருக்கு 10 ஆண்டு சிறை


ADDED : ஜூன் 07, 2025 09:30 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 09:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; சுசி ஈமு நிதி நிறுவனம்,7.61 கோடி ரூபாய் மோசடி வழக்கில், அந்நிறுவன அதிபர் குருசாமிக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சேலம், ஐந்து ரோடு சிக்னல் பகுதியிலுள்ள காம்பளக்சில், 'சுசி ஈமு பார்ம் இந்தியா லிமிடெட்' என்ற நிதி நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தில், 1.5 லட்சம் முதலீடு செய்தால், ஈமு கோழி குஞ்சுகள் வழங்கி, அதற்கு ெஷட் அமைத்து தருவதாகவும், பராமரிப்பு செலவுக்கு மாதம், 7,000 ரூபாய் மற்றும் போனஸ், இரண்டு ஆண்டுக்கு பிறகு டெபாசிட் தொகை முழுவதையும் திருப்பி தருவதாகவும் விளம்பரபடுத்தினர்.

இதை நம்பி நுாற்றுகணக்கானோர் டெபாசிட் செய்தனர்.ஆனால், முதிர்வு காலம் முடிந்தும் பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றினர். புகாரின் பேரில், சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கையில், 385 முதலீட்டாளர்களிடம், 7.61 கோடி ரூபாய் வசூலித்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இது தொடர்பாக, ஈரோடு மாவட்டம், பெருந்துறை, குன்னத்துார் ரோட்டை சேர்ந்த அந்நிறுவன நிர்வாக இயக்குனர் குருசாமி,45, பொதுமேலாளர் கதிர்வேல், ஊழியர் சுரேஷ்ஆகியோர் மீது, 2012, பிப்., 5 ல் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. கைதான இவர்கள் மீது, கோவை தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில்(டான்பிட் கோர்ட்) வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, 13 ஆண்டு களாக விசாரணை நடந்து வந்தது.

விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. விசாரித்த நீதிபதி செந்தில்குமார், குற்றம் சாட்டப்பட்ட குருசாமிக்கு, 10 ஆண்டுகள் சிறை, 7.89 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

மற்ற இருவர் விடுதலை செய்யப்பட்டனர். அபராத தொகையினை, பாதிக்கப்பட்ட டெபாசிட்தாரர்களுக்கு பிரித்து கொடுக்க உத்தரவிடப்பட்டது. அரசு தரப்பு சிறப்பு வக்கீல் முத்துவிஜயன் ஆஜரானார்.

கோவை மற்றும் ஈரோட்டில் பதிவான, இரண்டுமோசடி வழக்குகளில், ஏற்கனவே குருசாமிக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us