
செய்முறை:
நிலக்கடலையை வறுத்து தோல் நீக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். அதேபோல பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு நன்கு பொடித்து அதனுடன் பொடித்து வைத்துள்ள நிலக்கடலை, பொட்டுக்கடலை, ஏலக்காய் போன்றவற்றைச் சேர்த்து நன்கு கிளறவும். இப்போது பூரணம் தயார். தேவைப்பட்டால் இதனுடன் முந்திரி, திராட்சை, தேங்காய் போன்றவற்றை கூட சேர்த்துக் கொள்ளலாம். அடுப்பில் வாணலியை வைத்து ரவையை கொட்டி லேசாக வறுத்து, மிக்ஸியில் போட்டு பொடிக்கவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பொடித்து வைத்துள்ள ரவை, ஒரு சிட்டிகை உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
சிறிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து பூரிக்கு தேய்ப்பது போல் தேய்த்து நடுவில் ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி கலந்து வைத்துள்ள பூரணம் வைத்து இரண்டாக மடித்து ஓரங்களை நன்கு அழுத்தி ஒட்டவும். இல்லையெனில் உங்களுக்கு பிடித்த வடிவத்தில் தேய்த்துக் கொள்ளவும். -
பிறகு நெளி தேக்கரண்டியையோ அல்லது சோமாஸ் செய்வதற்கான அச்சையோ பயன்படுத்தி ஓரங்களை அழகாக வெட்டவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி மிதமாகக் காய்ந்ததும் தயாராக ஒட்டி ஒட்டி வைத்துள்ள சோமாஸ்களை எண்ணையில் போட்டு பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும். வடிதட்டில் போட்டு எண்ணெய் வடிந்ததும் காற்று புகாத பாத்திரத்தில் போட்டு வைத்தால் ஒரு வாரம் கூட வைத்து சாப்பிடலாம்.