ADDED : ஏப் 09, 2025 12:28 AM
அ நிறம் | அளவு
கோவை; தாம்பிராஸ் அமைப்பின், மாவட்ட அளவிலான நிர்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
தாம்ப்ராஸ் சங்கம் சார்பில், இலவச சுயம்வரம், விசுவாசுவருஷ பஞ்சாங்க வெளியீடு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பதவி ஏற்புவிழா ஆகிய முப்பெரும் விழா, ராம்நகரிலுள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.
மாநில பொது செயலாளர் வரதராஜன் தலைமை வகித்தார். ஜோதிட சக்ரவர்த்தி ஏ.எம்.ராஜகோபாலன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, உரை நிகழ்த்தினார். பின், மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர். சங்க உறுப்பினர்கள், 500 பேருக்கு இலவச பஞ்சாங்கம் வழங்கப்பட்டது.
