sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தமிழக - கேரள போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை

/

தமிழக - கேரள போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை

தமிழக - கேரள போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை

தமிழக - கேரள போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை


ADDED : செப் 20, 2024 09:27 AM

Google News

ADDED : செப் 20, 2024 09:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: மாநில எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், 'எல்லை ஒருங்கிணைப்பு கூட்டம்' நேற்று கோவை எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது.

கோவை - கேரள எல்லைப்பகுதியில் குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் கோவை மற்றும் கேரள எல்லைப்பகுதியில் உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று கோவை மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது.

இதில் கோவை எஸ்.பி., கார்த்திகேயன் மற்றும் பாலக்காடு எஸ்.பி., ஆனந்த் ஆகியோர் தலைமை வகித்தனர்.

கூட்டத்தில், இரு மாநில குற்றவாளிகள் தொடர்பான தகவல் பரிமாற்றம், லாட்டரி, விபசாரம், மதுபாட்டில் கடத்தல், கஞ்சா, மண் கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் குறித்த தகவல் பரிமாற்றம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

சட்டவிரோதமாக கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவதை கண்காணிக்கவும், பாதுகாப்பு பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். வி.ஐ.பி., போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை பாதுகாக்க இரு மாநில போலீசாரின் ஒருங்கிணைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us