sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

எல்லையில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்த தமிழக, கேரள மாநில அதிகாரிகள் ஆலோசனை

/

எல்லையில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்த தமிழக, கேரள மாநில அதிகாரிகள் ஆலோசனை

எல்லையில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்த தமிழக, கேரள மாநில அதிகாரிகள் ஆலோசனை

எல்லையில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்த தமிழக, கேரள மாநில அதிகாரிகள் ஆலோசனை


ADDED : மார் 21, 2024 06:58 AM

Google News

ADDED : மார் 21, 2024 06:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: தமிழக - கேரள மாநிலங்களின் எல்லையாக, கோவை மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்த, இரு மாநில அதிகாரிகள் நேற்று ஆலோசித்தனர்.

கோவை மாவட்டத்தின் இரு எல்லைப்பகுதிகள், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் எல்லைகளாக அமைகின்றன.

அதில், நடுப்புனி, வடக்குகாடு, ஜமீன்காளியாபுரம், கோபாலபுரம், வேலந்தாவளம், வீரப்பகவுண்டனுார், வாளையார், செம்மனாம்பதி உட்பட்ட, 14 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றன.

சோதனைச்சாவடிகளில் வாகன தணிக்கை மற்றும் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்துவது தொடர்பாக, கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

தேர்தல் நடத்தும் அதிகாரிகளான, கோவை கலெக்டர் கிராந்திகுமார், பாலக்காடு கலெக்டர் சித்ரா, திருச்சூர் கலெக்டர் கிருஷ்ணன் தேஜா ஆகியோர் தலைமை வகித்தனர்.

தமிழகம் - கேரள மாநில எல்லையாக உள்ள கோவை மாவட்டத்தில் உள்ள சோதனைச்சாவடிகள் வழியாக வரும் வாகனங்களை தணிக்கை மேற்கொண்டு பணம், மதுபானங்கள், போதைப்பொருட்கள், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி மாவட்ட எல்லைக்கு உட்பட்ட சோதனைச்சாவடிகளில் வாகன தணிக்கை மற்றும் பாதுகாப்பு பணி மேற்கொள்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

சோதனைச்சாவடிகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்; பதற்றமான சோதனைச்சாவடிகளை கண்டறிய வேண்டும்.

பதற்றமான பகுதிகளில் கூடுதலாக தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்க வேண்டும்.

மதுபானங்கள் கொண்டு செல்வதை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும். வெளிநாட்டு மதுவகைகள் இரு மாநிலங்களுக்கு இடையே நடமாட்டத்தை கண்காணிக்க, வாகன சோதனை மற்றும் கண்காணிப்பை மேம்படுத்த வேண்டுமென அறிவுரை வழங்கப்பட்டது.

கூட்டத்தில், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், எஸ்.பி., பத்ரி நாராயணன், டி.ஆர்.ஓ., ஷர்மிளா, மாவட்ட வன அலுவலர்கள் ஜெயராஜ், பிரவீன் (நெம்மாறா), ஜோசப் தாமஸ் (பாலக்காடு), போதைப்பொருள் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., அப்துல் முநியூர் (பாலக்காடு), பிரதீப் என்.வெயில்ஸ் (திருச்சூர்), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செந்தில்வடிவு, தாசில்தார் தணிக்கைவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us