sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

100 கிராமங்களில் 'ஸ்டார்ட் அப்' உருவாக்க முயற்சி தமிழ்நாடு சி.இ.ஓ., நம்பிக்கை

/

100 கிராமங்களில் 'ஸ்டார்ட் அப்' உருவாக்க முயற்சி தமிழ்நாடு சி.இ.ஓ., நம்பிக்கை

100 கிராமங்களில் 'ஸ்டார்ட் அப்' உருவாக்க முயற்சி தமிழ்நாடு சி.இ.ஓ., நம்பிக்கை

100 கிராமங்களில் 'ஸ்டார்ட் அப்' உருவாக்க முயற்சி தமிழ்நாடு சி.இ.ஓ., நம்பிக்கை


ADDED : அக் 10, 2025 09:39 PM

Google News

ADDED : அக் 10, 2025 09:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:ஸ்டார்ட் -அப் தமிழ்நாடு தலைமை செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன், நம் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

தமிழகத்தில், சர்வதேச அளவில், புத்தொழில் மாநாடு நடத்துவது இதுவே முதல்முறை. புதிதாக தொழில் துவங்க விரும்பும் தமிழக இளைஞர்களுக்கு, உலக நாடுகளுடன் தொடர்பு ஏற்படுத்துவதை பிரதான நோக்கமாக கொண்டு, இம்மாநாடு நடத்தப்படுகிறது.

மாநாட்டில், 40 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்த வரவேற்பு நாங்கள் எதிர்பார்க்காதது. எங்கள் முயற்சிக்கு பலன் கிடைத்ததில் மகிழ்ச்சி. 20 ஆண்டுகளுக்கு முன், ஐ.டி., துறை வளர்ச்சி காரணமாக, பெரும்பாலானோர் அவை சார்ந்த படிப்பு, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலில் ஆர்வம் செலுத்தினர்.

தற்போது ஏ.ஐ., வருகைக்கு பின், ஐ.டி., துறை வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது. 100 பேரின் பணியை, ஏ.ஐ., தெரிந்த இரண்டு பேர் செய்து விட முடியும் என்ற நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு மாற்றம் நிகழும் சூழலில், 'இன்னோவேஷன்' பிரதான இடத்தை பிடிக்கும்.

முன்பு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இந்த காலகட்டத்தில் இருந்தன. தற்போது, புத்தாக்கத்தை நோக்கிய தொழில் முயற்சியில் முக்கிய கட்டத்தில் இருக்கிறோம்.

அடுத்த 10 ஆண்டுகளில் ஆப்ரிக்காவும் இத்தகைய நிலையை அடையும்.

இன்றைய காலம் மற்றும் சூழலை, இளைஞர்கள் வலுவாக பிடித்துக் கொண்டு முன்னேற வேண்டும்.

அதற்குரிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அப்பணியையே தமிழக அரசு இதுபோன்ற புத்தொழில் மாநாடுகளின் வாயிலாக செய்து கொண்டிருக்கிறது.

தமிழகத்துக்கு, பெங்களூருக்கு போல் முதலீடு வருவதில்லை என்ற குற்றச்சாட்டை போக்கும் வகையில், புதிய திட்டத்தை அமல்படுத்த உள்ளோம். சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் மட்டுமின்றி சிறு நகரங்களிலும், 'ஸ்டார்ட் -அப்'பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.

குறைந்தது, 100 கிராமங்களில் ஸ்டார்ட்-அப் உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட உள்ளோம். ஒருபுறம் மிகவும் உயர்திறன் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே தருணம், விளிம்புநிலை மக்களுக்கும் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க உள்ளோம்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us